//]]>

Sunday, February 25, 2018

கரவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு(Photo)


மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டிப் பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (25) அதிகாலை வீட்டிலிருந்து சென்ற 21 வயதான மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞனின் மரணம் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment