கொள்கையளவில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
யாழ். புத்தூர் ஆவரங்கால் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை(17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களுடைய விடிவுக்காக நாங்கள் எந்தக் கொள்கைகளை எம்முள் கொண்டிருக்கிறோமோ அந்தக் கொள்கையில் பிடிப்புடையவர்களாக ஒற்றுமையுணர்வுடன் எமது பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும்.
தவிர இந்த விடயம் தொடர்பாக கட்சி ரீதியாக என்னால் எதனையும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கமைய வடக்கில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment