//]]>

Saturday, February 17, 2018

ஒருவாரமாக காணாமல் போனவர் யாழில் எலும்புக்கூடாக மீட்பு

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

எழுதுமட்டுவாள் வடக்குப்  பகுதியைச் சேர்ந்த ஆண் குடும்பஸ்தரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(தமிழின் தோழன் -)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment