திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் அல்லிப்பூ பறிப்பதற்காக படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படகு கவிழ்ந்ததில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்குப் பூப் பறிப்பதற்காக குடும்பத் தலைவருடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் படகில் சென்றுள்ளனர். இதன் போது படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நிலாவெளிப் பிரதேச வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்குப் பூப் பறிப்பதற்காக குடும்பத் தலைவருடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் படகில் சென்றுள்ளனர். இதன் போது படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நிலாவெளிப் பிரதேச வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.