யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை(11) பிற்பகல்-02 மணி முதல் முன்பள்ளி முன்றலில் நடைபெறவுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச சனசமூக நிலையத் தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முல்லைத்தீவு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார் கயந்தன் முதன்மை விருந்தினராகவும்,புன்னாலைக்கட்டுவன் தெற்கு கிராம அலுவலர் பே. மயூரதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment