//]]>

Saturday, March 10, 2018

சமூக வலைத்தள ஊடகங்கள் மீதான தற்காலிக கட்டுப்பாடு தொடரும்!

இலங்கையில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வன்முறைகள் தூண்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து முகநூல், கீச்சகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது  அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்திருந்தது. இந்தத் தடை இன்று(10) நீக்கப்படுமென நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்தப்படவுள்ள பாதுகாப்பு நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தின் பின்னரே தடையை நீக்குவது தொடர்பான முடிவெடுக்கப்படுமெனவும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment