மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பலபகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை- 08 .30 மணி முதல் மாலை-05.30 மணி வரை குடாநாட்டின் பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, மானிப்பாய் வீதி, கைதடி வீதி, இருபாலைச் சந்தி, இருபாலை பழைய வீதி, வட்டக்குளம், கட்டைப்பிராய், கல்வியங்காடு, இலங்கைநாயகி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டு, இராமலிங்கம் வீதி, முடமாவடி, கிளிகடைச் சந்தி, GPS வீதி, கோப்பாய்ப் பொலிஸ் நிலையம், திருநெல்வேலி பாற்பண்ணை, திருநெல்வேலிச் சந்தை, கலாசாலை வீதி, பலாலி வீதியின் ஒருபகுதி, துணைவி, பண்டத்தரிப்பு, மாதகல், இளவாலை, சங்கானை, சாந்தை, சில்லாலை, சீரணி, சண்டிலிப்பாய், வட்டுக் கோட்டையின் ஒரு பகுதி, தொட்டியாலடி, பிரான்பற்று, மாரீசன்கூடல், சேந்தான்குளம், பெரியவிளான், மெய்கண்டான், சுழிபுரம்,தொல்புரம், யம்புகோளப் பட்டிணம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment