//]]>

Saturday, March 10, 2018

சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து இலங்கை முழுவதும்  முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று சனிக்கிழமை(10) முதல் மீண்டும் செயற்பட ஆரம்பிக்குமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்றைய தினம் நீக்கப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மோசமான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான் சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள காரணத்தால் அந்தத் அந்த தடை நீக்கப்படும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment