கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினரொருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் முக்கிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்து வந்த போதும் அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, மோதல்களைத் தடுக்கத் தவறியதாகவும் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment