//]]>

Wednesday, November 2, 2016

துர்நாற்றம் தடுக்க சில வழிகள்


காலை மற்றும் இரவில் கட்டாயம் பல் துலக்க வேண்டும். பற்களைச் சரியாகத் தேய்க்காமல் இருந்தால், வெள்ளைப் படிமம் போன்ற மாவு படியும். இது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

கொஞ்சமாகக் காரை படியும்போதே பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

சொத்தைப் பல்லில் உணவுத் துகள் தங்கி துர்நாற்றம் ஏற்படலாம். எனவே, இவற்றை மருத்துவர் உதவியோடு சரிசெய்ய வேண்டும்.

ஞானப்பல் முளைக்கும் சமயத்தில் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும், வாய் கொப்பளிக்க வேண்டும். அது, நொறுக்குத்தீனியாக இருந்தாலும் சரி.

வாய் உலராமல், இருக்க நீர் அருந்த வேண்டும். நீர்சத்து நிறைந்த காய்கனிகளைச் சாப்பிடலாம்.

நீர் சரியாக அருந்தாவிட்டால், உமிழ்நீரின் அடர்த்தி குறைந்து வாய் துர்நாற்றம் ஏற்படும்.

பசியால், வாயுத் தொல்லை வரும். அதனால், வாயில் துர்நாற்றம் வீசும். ஆகவே, நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.

காலை எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்யலாம். நல்லெண்ணெயை வாயில் வைத்து, வழவழப்பு நீங்கும் வரை வாய் கொப்பளித்த பின் பல் துலக்கலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment