//]]>

Tuesday, December 6, 2016

யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் ஜெயலலிதாவுக்கு வடக்கு முதலமைச்சர் உட்பட பலரும் அஞ்சலி (Photos)



யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

வட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் உள்ள இரங்கல் கையேட்டில் கையொப்பமிட்டுள்ளனர்.

 இன்று மதியம் 1 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் ஒப்பமிடுவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இரங்கல் கையேட்டில் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம், அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் யாழ். அரசாங்க அதிபர் ஆகியோர் தங்கள் இரங்கல்களை தெரிவித்திருக்கின்றனர்.

 யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திலுள்ள இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment