//]]>

Monday, January 2, 2017

யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்(Photo)

யாழ். போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூன்றாவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(01)  நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில்  முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டமையால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

யுத்தத்தினாலும், விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின்
அன்றாட தேவைகளுக்குத் தேவையான மருந்துகள் அடங்கிய பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்விற்கான அனுசரணையை அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கம்  வழங்கியுதவியது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியின் நெறிப்படுத்தலில் விசேட வைத்திய நிபுணர்களான  சிவமகாலிங்கம் அரவிந்தன், உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பிறேம கிருஷ்ணா மற்றும் சத்திர சிகிச்சைநிபுணர் டாக்டர் ரி.சர்மா ஆகியோரது வழிகாட்டலில் ஏனைய துறைசார் வைத்தியர்கள் இம் மருத்துவ முகாமிற்கு உதவினர்.

இதன்போது குருதி மற்றும் சலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விசேட சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

அத்துடன் விசேட துறைசார் வைத்திய நிபுணர்களது ஆலோசனைக்கமைவாக மேலதிக பரிசோதனைகளுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment