//]]>

Tuesday, January 24, 2017

யாழ்.ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடுமை(Photo)

யாழ்.ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணிப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப்  பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரொருவரின் மனைவியே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டவராவார். 

குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த சமயம் வீட்டிற்குச் சென்ற விஷமிகள் குழுவொன்று இளம் பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  பலியானவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் இரு நபர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களை மீட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்துப் பொலிஸாருக்கும்,பொதுமக்களுக்குமிடையில் கடுமையான தர்க்கம் மூண்டுள்ளது. இதனால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. 

ஞானசேகரன் கம்சியா (வயது -24) என்ற கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டவராவார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment