வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கெதிராக முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாம் முன்பாக நேற்று வியாழக்கிழமை(22) இடம்பெற்ற நிலமீட்புப் போராட்டத்தின் போது நில அளவைத் திணைக்கள வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ள முல்லைத்தீவுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment