பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப் பொருள் வர்த்தகருமான தடல்லகே மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வத்தளை – ஹேகித்த பிரதேசத்தில்இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய வத்தளை – ஹேகித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்குரிய வேன் ஒன்றை நிறுத்திச் சோதனை செய்ய முற்பட்ட போது வாகனத்திலிருந்து விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது நடாத்தப்பட்ட பதில் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பொருள் வர்த்தகரான தடல்லகே மஞ்சு என அடையாளம் காணப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment