யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(24) பிற்பகல்-01 மணி முதல் பாடசாலை மைதானத்தில் அதிபர் யோகதயாளன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த விளையாட்டு நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் யாழ்.மாவட்ட முகாமையாளர் செ.கோகுலதாஸ் சிறப்புவிருந்தினராகவும், திருநெல்வேலி இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி. யாமளை தனேஷ் கெளரவவிருந்தினராகவும் கலந்துகொண்டார்.
இதன் போது மாணவர்களின் மெய்வன்மை நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment