//]]>

Thursday, March 8, 2018

யாழ்.மாநகரசபைக்குத் தெரிவானவருக்கு கடூழியச்சிறை(Photo)

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் யாழ்.மாநகர சபை உறுப்பினராகத் தெரிவானவரும்,முற்போக்குத் தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு இரு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம்(08) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நகைத் திருட்டுக் குற்றச்சாட்டிலேயே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மூவரும் தலா ஏழு இலட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும்.அதனைச் செலுத்தத் தவறின் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதவான் சி.சதீஸ்தரன் தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment