//]]>

Thursday, March 8, 2018

கண்டியில் மீண்டும் 12 மணி நேர ஊரடங்கு

கண்டி நிர்வாக மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் 12 மணி நேர பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை(08) பிற்பகல்-06 மணி தொடக்கம் நாளை பிற்பகல்-06 மணி வரையான 12 மணி நேரத்திற்கு இந்த ஊரடங்கு அமுலிலிருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றுப் புதன்கிழமை (07) பிற்பகல்-04 மணி முதல் இன்று பிற்பகல்- 04 மணி வரை விதிக்கப்ப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று முற்பகல்-10 மணி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment