யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு உள்ளான நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த நபர் தொடர்பில் எந்த விபரமும் இதுவரை கிடைக்காததால் பொலிஸார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, குறித்த சடலம் தொடர்பில் அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.
45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்த போதே நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பலத்த வாள்வெட்டுக்கு இலக்கான மேற்படி நபர், பேசமுடியாத நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்ததால் எந்த தகவலையும் அறியாத பொலிஸார் மேற்படி நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றனர்.
021-2255160 என்ற நிலையத் தொலைபேசி இலக்கம் ஊடாகவும், அல்லது 0777811168 என்ற அலைபேசி ஊடாகவும் அறியத்தருமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
குறித்த நபரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment