ஜே,வி.பியினர் தடை செய்யப்பட்ட அமைப்பல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்ட அமைப்பு என அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கிறார்.
ஜே.வி.பியினர் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்கிறார்கள். அவர்கள் எங்கள் இனப் பிரச்சினை தீர்விலே, எங்களை அழிப்பதிலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னின்று செயற்பட்டார்கள்.
அவர்கள் தங்களுடைய வீரர்கள் நினைவாக அனுஷ்டிக்கும் நினைவு தினத்தை நாங்கள் நல்லிணக்கத்திற்கு அல்லது அரசியல் சாசனத்திற்கோ எதிராகவோ பார்க்கவில்லை.
அதேபோன்று, எழுக தமிழ் பேரணியோ அல்லது மாவீரர் நாளாகவோ இருக்கட்டும். எங்கள் உரிமைக் கோரிக்கைகளை உரத்துச் சொல்பவையாக இருக்கின்றனவே தவிர எந்தவிதமான குழப்பங்களையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
ஜே.வி.பியினர் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்கிறார்கள். அவர்கள் எங்கள் இனப் பிரச்சினை தீர்விலே, எங்களை அழிப்பதிலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னின்று செயற்பட்டார்கள்.
அவர்கள் தங்களுடைய வீரர்கள் நினைவாக அனுஷ்டிக்கும் நினைவு தினத்தை நாங்கள் நல்லிணக்கத்திற்கு அல்லது அரசியல் சாசனத்திற்கோ எதிராகவோ பார்க்கவில்லை.
அதேபோன்று, எழுக தமிழ் பேரணியோ அல்லது மாவீரர் நாளாகவோ இருக்கட்டும். எங்கள் உரிமைக் கோரிக்கைகளை உரத்துச் சொல்பவையாக இருக்கின்றனவே தவிர எந்தவிதமான குழப்பங்களையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
இன்று திங்கட்கிழமை(28) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம்.அந்த இயக்கத்திற்கு ஆதரவான நிகழ்ச்சிகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால் அவர்களுக்கு ஆதரவான நிகழ்வுகளை நடாத்துவது குற்றமாகக் கருதப்படும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். குறித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மலையகக் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசிய போது அங்கே சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி திருப்தியான விடயங்களை அறிக்கையாக வெளியிட்டவர்களில் ஒருவர் மனோ கணேசன். மலையகத் தலைவர்களில் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன், முஸ்லீம் தலைவர்களில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முக்கியமானவர்கள்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்த போது எங்களில் 14 பேர் கலந்து கொண்டோம். அமரர் சிவசிதம்பரம் ஐயா சுகவீனமாகக் கலந்துரையாடவில்லை. நானும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தேன்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்த போது எங்களில் 14 பேர் கலந்து கொண்டோம். அமரர் சிவசிதம்பரம் ஐயா சுகவீனமாகக் கலந்துரையாடவில்லை. நானும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தேன்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரனும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு கலந்து கொண்டு நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து சில வேலைகளைச் செய்வோம் எனச் சொன்ன மனோ கணேசன் போன்றவர்களுக்கு அன்று தெரியாத பயங்கரவாதம் இன்று பயங்கரவாதமாகத் தெரிகிறதா?
காலியில் சிங்கள மக்கள் மத்தியில் பேசும் போது மாத்திரம் உங்களுக்கு இனிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம்.
இவ்வாறு கலந்து கொண்டு நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து சில வேலைகளைச் செய்வோம் எனச் சொன்ன மனோ கணேசன் போன்றவர்களுக்கு அன்று தெரியாத பயங்கரவாதம் இன்று பயங்கரவாதமாகத் தெரிகிறதா?
காலியில் சிங்கள மக்கள் மத்தியில் பேசும் போது மாத்திரம் உங்களுக்கு இனிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமென்ற அமைப்புத் தற்போது இல்லை. முற்றாக அவர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என அரசாங்கம் சொல்கிறது என்றால் இல்லாத இயக்கத்திற்கு ஏன் தடை விதித்துள்ளீர்கள்?
விடுதலைப் புலிகள் இயக்கம், ஆயுதப் போராட்டம் என்பன மே மாதம்-17 ஆம் திகதி மெளனிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட, கைவிடப்பட்டதொரு சூழலில் தான் நாங்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்றார்.
ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட, கைவிடப்பட்டதொரு சூழலில் தான் நாங்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்றார்.
0 comments:
Post a Comment