'கருணா அம்மான்' என அழைக்கப்படும் இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்குக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை(07) பிணை வழங்கப்பட்டுள்ளது.
அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச் சாட்டில் கடந்த நவம்பர்-29 ஆம் திகதி கருணா கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இதுவரை நாளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாவைப் பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா வீதம் ஐந்து சரீரப் பிணையிலும் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கருணாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருணா வெளிநாடுகளுக்குப் பயணிக்கத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 comments:
Post a Comment