யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(01) இரவு விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
தீப் பரவல் காரணமாக மேற்படி சனசமூக நிலையத்திலிருந்த சுமார் நூறு வரையான நூல்களும், தளபாடங்களும் முற்றாகத் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment