மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மற்றும் வவுனியா மாவட்டத்தின் பலவிடங்களில் இன்று திங்கட்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். மானிப்பாயின் ஒரு பகுதி, கட்டுடை, அரசடி, பிப்பிலி ஆகிய பிரதேசங்களில் பிற்பகல்-01 மணி முதல் 05 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளது.
இதேவேளை, வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களில் இந்த மாதத்தின் குறிப்பிட்ட சில தினங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள் ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment