ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இந்தமாதம்-09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் ஒன்பது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment