மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை-08. 30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். கொமர்சல் வங்கி, யாழ். தேசிய சேமிப்பு வங்கி, யாழ். இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, சுகாதாரத் திணைக்களம், கார்கில்ஸ் பூட் சிற்றி, யாழ். வைத்தியசாலை மூன்று மாடிக் கட்டடத் தொகுதி, அபி கட்டடம், யாழ். விடுதி, பல்கலைக்கழகத் தங்கு விடுதி, சின்னச் சந்தையடி, ஆஸ்பத்திரி வீதி வேம்படிச் சந்தியிலிருந்து சத்திரச் சந்தி வரை, கந்தப்பசேகரம் வீதி, மகாத்மா வீதி, முனீஸ்வரன் வீதி, கஸ்தூரியார் வீதியில் ஆஸ்பத்திரி வீதிச் சந்தியிலிருந்து வின்சர் சந்தி வரை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், வேம்பிராய், மந்துவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment