.
இது தொடர்பில் அவர் விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பழைப் பிரதேசத்தில் குறித்த நோயின் தாக்கத்தை முதன்முதலாக இனம் கண்டுள்ள நிலையில் இதுவரை இந்தப் பிரதேசத்தில் 25 மாடுகள் இந்த நோயின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதுடன், பின்னர் வட்டுக் கோட்டைப் பிரதேசத்தில் 51 மாடுகளும், , சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தில் 33 மாடுகளும் நல்லூர்ப் பிரதேசத்தில் 10 மாடுகளும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த நோய் ஒரு வகையான வைரஸினாலேயே பரவுகிறது. இந்த நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ள ஒரு பிரதேசத்திலிருந்து வேறு பிரதேசங்களுக்கு மாடுகள் சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுவதால் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகாத பிரதேசங்களிலும் இந்த நோய் பரவக் கூடிய ஏதுநிலை அதிகமாகக் காணப்படுகின்றது.
இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான பசுமாடுகளிலிருந்து பெறப்படும் பசுப்பாலை மனிதர்கள் பருகுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், இதனால் மனிதர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இந்த நோய் மாடுகளை மாத்திரமன்றி ஆடுகளையும் தாக்கும் தன்மையுடையது.
எனவே, கால்நடைப் பண்ணையாளர்கள் கால்வாய் நோயின் தாக்கம் தொடர்பில் நன்கு விழிப்புடன் செயற்படுவதுடன் வருடாவருடம் யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தினால் இலவசமாக ஏற்றப்படும் தடுப்பூசிகளைத் தவறாது ஏற்றுவதன் மூலம் கால்வாய் நோய்த் தாக்கத்திலிருந்து தமது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நாங்கள் மேற்கொண்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பண்ணையாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சினைப்படுத்தப்பட்ட பசுக்கள் மற்றும் நான்கு மாதங்களுக்கு குறைந்த மாடுகள் தவிர்ந்த அனைத்து மாடுகளையும் பதிவு செய்து முன்கூட்டியே தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்வதன் மூலம் இவ்வாறான நோய்கள் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.
எனவே, கால்நடைகள் வளர்க்கும் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பண்ணையாளர்களும் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் தத்தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்தில் தங்களது மாடுகளைப் பதிவு செய்து மாடுகளுக்கான காது இலக்கத்தைப் பெற்றுக் கொள்வது மிக முக்கியமானது. இவ்வாறான பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துப் பண்ணையாளர்களும் தவறாது தமது மாடுகளைப் பதிவு செய்வதன் மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எங்களால் இலகுவில் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment