//]]>

Friday, January 26, 2018

தவறிழைத்துள்ள கோத்தபாய!


வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேர் தவறிழைத்துள்ளனர் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(25) நடைபெற்ற விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தனர். நினைவிடத்தை அமைப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையைக்  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நீடிப்பு செய்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment