//]]>

Friday, January 26, 2018

இந்திய சுதந்திர தின நாளில் வடக்கு முதல்வரின் வேண்டுகோள்


ஒரு மதம் ஒரு இனம் என்ற கொள்கையை பாரதம் வெறுத்தொதுக்கியுள்ளது. மதச்சார்பற்ற நாடாகவே இன்று வரையிலிருந்து வருகின்றது. யாவரின் மொழிகளையும், மதங்களையும் மதிக்கும் சுபாவம் இந்திய மக்களிடையே இதுவரையில் இருந்து வந்துள்ளது. அந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றோம். அதுமட்டுமல்லாமல் எம்மவரும் மத, மொழி பக்கச்சார்பற்ற அந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை(26) முற்பகல் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகிய போது பிரதம விருந்தினராகக்க கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இங்கு இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் இருக்கின்றார். இன்றையதினம் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தினம். வறுமையில் வாடிய இந்திய நாடு இன்று பசுமைப்புரட்சி மூலம் உணவில் தன்னிறைவு கண்டுள்ளது. பல் துறைகளில் இந்தியா உலகத் தரத்திற்கு முன்னேறிவிட்டது. இவ்வாறு ஒரு நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது பாரத நாட்டின் மொழி, மதக் கொள்கை எனலாம்.

ஆங்கிலம் எல்லா மொழியினரையும் ஒன்றிணைத்து வந்துள்ளது. ஒரு மதம் ஒரு இனம் என்ற கொள்கையை பாரதம் வெறுத்தொதுக்கியுள்ளது. மதச்சார்பற்ற நாடாகவே இன்றுவரையில் இருந்து வருகின்றது.

யாவரின் மொழிகளையும், மதங்களையும் மதிக்கும் சுபாவம் இந்திய மக்களிடையே இதுவரையில் இருந்து வந்துள்ளது. அந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றோம். அதுமட்டுமல்லாமல் எம்மவரும் மத, மொழி பக்கச்சார்பற்ற அந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment