பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் குபேர வாசல்(வடக்கு வாசல்) கோபுர கும்பாபிஷேகம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை- 07.30 மணி முதல் 08.27 மணி வரையான சுபநேரத்தில் இடம்பெறவுள்ளது.
குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
பிற்பகல்- 05.30 மணியளவில் கோபுர கலசங்கள் சிற்பாசிரியர் தலைமையில் திருவீதிவலம் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டது.
இதேவேளை, குபேர வாசல்(வடக்கு வாசல்) கோபுர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment