இந்தியாவின் 69ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று (27)வெகு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு யாழ். கச்சேரி - நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.
யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின செய்தியையும் வாசித்தார்.
இந்திய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதமான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி= விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(படங்கள்: ஐ-சிவசாந்தன்)
0 comments:
Post a Comment