//]]>

Friday, February 23, 2018

உதயதுங்க வீரதுங்கவிற்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிவப்பு ஆணை உத்தரவு

ரஷ்யாவுக்கான  இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக சர்வதேசப் பொலிஸாரின் சிவப்பு ஆணை (Red Warrant) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை  அதிகாரிகளின் கோரிக்கைகளை அடுத்தே சர்வதேச பொலிஸாரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மிக் போர் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் உதயங்க வீரதுங்கவுக்கு அழைப்பாணை விடுத்திருந்தும் அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகாத நிலையிலேயே நீதிமன்றத்தின் ஊடாக இந்த சர்வதேச  பொலிஸாரின் சிவப்பு ஆணை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment