//]]>

Friday, February 23, 2018

மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய நூல் நாளை வெளியீடு

ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய "பூகோளவாதம் புதிய தேசியவாதம்" நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை சனிக்கிழமை(24) பிற்பகல்-03 மணி முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல், சமூக ஆய்வாளர் ம. நிலாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த நூலின் கெளரவப் பிரதியை குழந்தை மா. சண்முகலிங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் க. அருந்தாகரன் நூல் வெளியீட்டுரையையும், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி- கே. ரி. கணேசலிங்கம், அரசறிவியல், சமூக விஞ்ஞானத் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி- ரி. கிருஷ்ணமோகன், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் நூலாய்வு உரைகளையும் ஆற்றவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment