சித்திரபாட ஆசிரியர் பா. இராமணாகரனின் 'கல்' சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை(17) பிற்பகல்-03 மணி முதல் யாழ். கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்நாடு தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், கவிஞருமான கோ. வாமனன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியை திருமதி- மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment