கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமாகவிருந்த பிரதான சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை(08) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் உட்பட பத்துப் பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதான சந்தேக நபர் உட்பட பத்துப் பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த-04 ஆம் திகதி முதல் இன்று(08) காலை-06 மணிவரையான தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதிகளில் 71 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியின் திகன மற்றும் பூஜாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்துக் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை(08) பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment