முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின் இராஜதந்திரிகளை அவசரமாகச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் இதுகுறித்து விளக்கமளிப்பதற்காகவே மகிந்த ராஜபக் ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார். எனினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment