//]]>

Wednesday, November 30, 2016

யாழ். தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கான அரிய வாய்ப்பு

யாழ்.தெல்லிப்பழைப் பிரதேச செயலம் நாளை வியாழக்கிழமை(01) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை பொதுமக்களுக்கான நடமாடும் சேவையொன்றை நடாத்தவுள்ளது. 

தெல்லிப்பழைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவுகள், காலம் கடந்த பிறப்பு, இறப்புப் பதிவுகள்,தேசிய அடையாள அட்டை பெறல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளது. 

இந்த அரிய வாய்ப்பினைப் பொதுமக்கள் தவறாது பயன்படுத்திப் பயன் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment