வடமாகாணத்தில் முல்லைத்தீவு,கிளிநொ
யாழ்ப்பாணம் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழா இன்று புதன்கிழமை(30) முற்பகல்-09.30 மணியளவில் நல்லூர் நாவலர் வீதியிலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ந. தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தசூழலுக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையிலிருந்து வருகின்றது. குறிப்பாக வடமாகாணத்தில் விசேட கல்விப்பிரிவுகளில் கல்வி கற்றுவருகின்ற சிறுவயது முதல்16 வயது வரையான விசேட தேவையுடைய மாணவர்களின் தேவைகள் கேள்விக்குறியாக மாறிவருகின்றது.
220 இற்கும் மேற்பட்ட சிறார்கள் தற்போது வடமாகாண விசேட கல்விப்பிரிவில் கல்வி கற்றுவருகின்றனர். இவ்வாறு கற்று வரும் சிறார்கள் திறமைமிக்க சாதனையாளர்களாக உருவாக வேண்டுமாயின் அவர்களுக்கான ஒருங்கிணைப்பை மத்திய அரசாங்க அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment