வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக சி.தவராசாவே தொடர்ந்தும் நீடிப்பார் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய 67ஆவது அமர்வில் வைத்தே அவர் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்திருந்தார்.
கடந்த வடமாகாண சபையின்-66 ஆவது அமர்வில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் மாற்றம் தொடர்பான அறிவித்தலை அறிவிப்பேன் என வடமாகாண அவைத் தலைவர் அறிவித்திருந்தார்.
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரை மாற்றி வடமாகாண சபை உறுப்பினர் தவநாதனை வடமாகாண எதிர்க்கட்சி தலைவராக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரினால் வடமாகாண சபை அவைத் தலைவருக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தற்போதைய வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தமக்கு உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதாகத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த முதலாம் திகதி வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேரையும் அழைத்துக் கருத்துப் பெறப்பட்டது. இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் தனது கருத்துக்களை வழங்கக் கால அவகாசம் கேட்டிருந்தார்.
வடமாகாண எதிர்க்கட்சியின் எட்டு உறுப்பினர்களில்ஏழு உறுப்பினர்கள் தவராசாவுக்கு ஆதரவாகவும், ஒரு உறுப்பினர் நடுநிலையாகவும் இருந்தமையால் தவராசாவே தொடர்ந்தும் எதிர்க்கட்சி தலைவர் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதன் போது தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment