//]]>

Tuesday, December 6, 2016

கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கத்தின் உருவச் சிலை யாழில் திறப்பு (Photos)

யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கூட்டுறவுப் பெரியார் அமரர்- வீரசிங்கத்தின் உருவச் சிலை திறப்பு விழாவும், அவரது 52 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வும் நேற்றுத் திங்கட்கிழமை(05) காலை-10 மணி முதல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்ப்பாணக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பொ.மோகன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். 

யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட கூட்டுறவுப் பெரியார் அமரர்- வீரசிங்கத்தின் சிலையை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மூத்த கூட்டுறவாளர்கள் வீரசிங்கத்தின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 
அதனைத் தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கத்தை நினைவு கூர்ந்து நினைவுரைகளும், கூட்டுறவுத் துறையில் நீண்ட காலம் சேவையாற்றிய கூட்டுறவாளர்களுக்கான கெளரவிப்பும், பிரதேசம் தோறும் செயற்படும் கூட்டுறவுச் சபைகளின் செயற்பாடுகளைப் பாராட்டும் முகமாகப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment