மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பரும் யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம் .ஜி .ஆர் சிலைக்கு முன்பாக ஜெயலலிதாவின் உருவப்படத்தினை வைத்து இன்று செவ்வாய்க்கிழமை(06) மாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை எம்.ஜி.ஆர் சிலை முன்பாக கறுப்பு கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், வெடி கொளுத்தி மறைந்த தமிழக முதல்வருக்கு இறுதி மரியாதையும் யாழ் எம்.ஜி.ஆரினால் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment