//]]>

Tuesday, December 6, 2016

எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் (Videos)


தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கதற வைத்த ஜெயலலிதாவின் மரணம் நேற்று (05.12.2016) இரவு 11.30 மணி அளவில் நேர்ந்தது.

இன்று முழுவதும் ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. 4.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார்.
மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க ஜெயலலிதாவின் பூதவுடல் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி அவரது தோழி சசிகலாவிடம் கையளிக்கப்பட்டது.
ஏராளமான மக்களின் கண்ணீர் கதறல்களால் மெரீனாவே குளமானது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment