யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை புதன்கிழமை(01) பிற்பகல்-01 மணி முதல் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் பாடசாலை அதிபர் கனகசபை காராளசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகவும், உடுவில் கல்விக் கோட்டப் பதில் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை சிவானந்தராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment