//]]>

Wednesday, March 7, 2018

யாழ்ப்பாணம், வவுனியாவின் சில பகுதிகளில் நாளை மின்தடை


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை  வியாழக்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிராகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.மாவட்டத்தின் கச்சேரி கிழக்கு ஒழுங்கை,பேரின்பநாயகம் வீதி, காட்டுக்கந்தோர் வீதி, மாவை கலட்டி, கொல்லங்கட்டி  ஏ-09 வீதியில் புங்கன் குளத்திலிருந்து கச்சேரி நல்லூர் வீதிச் சந்தி வரை, பாரதி லேன், புங்கன்குளம் வீதி புகையிரதக் கடவை வரை ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின்  தவசிக்குளம் கிராமம், சாளம்பைக்குளம் கிராமம்,பட்டானிச் சூரிலிருந்து பம்பைமடு வரை, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment