//]]>

Tuesday, January 31, 2017

யாழ். ஏழாலை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி விமரிசை(Photos)

யாழ். ஏழாலை மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி நேற்றுத்  திங்கட்கிழமை(30) பிற்பகல்- 01.30 மணி முதல் பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் விமரிசையாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்விவலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.கோசலை குலபாலசிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளும், கண்கவர் இடைவேளை நிகழ்வுகளும் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், இல்லங்களுக்குமான வெற்றிக் கேடயங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த விளையாட்டு  நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment