//]]>
அல்லிப்பூ பறிக்க படகில் சென்ற -

Wednesday, February 1, 2017

இந்துச் சிங்களவர்: மறவன்புலவு சச்சிதானந்தம் (Photos)


நொச்சியாகமம் - செட்டிகுளம் சாலை, தந்திரிமலை வழியாக.
தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலாளர் திரு. இராம இரவிக்குமார் அவர்களை அச்சாலை வழி அழைத்துச் சென்ற போது மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா ஆச்சரியமடைந்துள்ளார்.

மகாவில்லாச்சி முழுவதும் சிங்களக் குடியிருப்புகள் போலும். தமிழ் தெரிந்தவர் ஒருவரையும் சந்திக்கவில்லை.

சாலை நெடுகிலும் ஓரங்களில் பிள்ளையார் கோயில்கள். அங்கங்கே ஓரிரு புத்தர் கோயில்கள். சிங்கள நாட்டில் புத்தர் கோயிலில் பிள்ளையார் சிலை இருக்கும். தனிக் கோயிலில் பிள்ளையாரை வழிபடுவது குறைவு.

ஓயாமடு, மகாவில்லாச்சி, தந்திரிமலை நெடுகிலும் பிள்ளையாருக்குத் தனிக் கோயில்கள். சிங்களவர் கட்டிய கோயில்கள். பெயர்ப் பலகைகள் சிங்களத்தில் உள.

அவர்கள் இந்துச் சிங்களவரா?

பிள்ளையார் வழிபாடு என்ற நூலைச் சிங்களத்தில் தயாரித்து வெளியிட்டு இந்துச் சிங்களவருக்கு வழங்க உள்ளேன் என்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்