//]]>

Thursday, January 12, 2017

யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்


எதிர்வரும் திங்கள் (16.1.2017) முதல் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ஸ்ரிக், பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’ கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனையானது நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களின் சுகாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது.
இந்த நாட்டில் ‘லன்ச் சீட்கள்' 10 மில்லியன் பாவனையில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றிக்கு பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் வகைகளில் 400 தொடக்கம் 500 தொன் கழிவுப் பொருளாக வெளியேற்றப்படுகின்றது.
இதன் காரணமாக புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு, ஏற்படும்.
மேலும் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டு நோய்வாய்ப்பட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில்,
1. நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வைத்தியசாலை வளாகத்தினுள் பொலித்தீன் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை (துணியால் செய்த) பாவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
2. உணவு கொண்டு வருவதற்கு ‘லன்ச் சீட்’ இற்குப் பதிலாக சாப்பாட்டு பெட்டிகளை (துருப்பிடிக்காத உலோகஃ உணவுத் தர பிளாஸ்ரிக்) வாழை இலை, வாழைமடல் போன்ற இயற்கையான சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
3. பிளாஸ்ஸ்ரிக் , தண்ணீர் போத்தல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதை முடியுமான வரை தவிர்க்கவும். வைத்தியசாலையினால் சுத்தமான வடிகட்டிய குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4. போத்தலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், பிளாஸ்ஸ்ரிக் கோப்பைகள், குடிபானக்குழாய் போன்றவற்றின் பாவனையை முடியுமானவரை குறைத்து நீர் வடிகட்டிகள், மட்பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், செராமிக் கோப்பைகளை பாவிக்கவும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் அடுத்தவாரம் முதல் பொதுமக்களது பொதிகள் யாவும் பரிசோதிக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment