யாழ்.நல்லூர் பிரதேச சபையின் செயலாளராக இளவாலையைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் சுதர்ஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றி வந்த திருமதி தி.அன்னலிங்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள நிலையிலேயே மேற்படி புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
கடந்த-2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஊர்காவற்துறையின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய சுந்தரேஸ்வரன் சுதர்ஜன் யாழ்,மாநகர சபை மற்றும் மானிப்பாய்ப் பிரதேச சபை ஆகியவற்றில் முகாமைத்துவ உதவியாளராகவும் கடமையாற்றியவராவார்.
நல்லூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ள சுதர்ஜன் கடந்த ஜனவரி மாதம்-02 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிகமான சனத்தொகை உள்ள நிலையில் கழிவு முகாமைத்துவம், யாழ்.குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் என் முன்னாள் சவால்களாகவுள்ளதாகவும், இவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் நல்லூர் பிரதேச சபையின் புதிய செயலாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment