தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், ‘ஏழு வருடங்கள் சரணாகதி அரசியலின் முடிவு என்ன? மைத்திரி – ரணில் புதிய கூட்டு அரசின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன? எங்கே… எங்கே… எங்கள் பிள்ளைகள் எங்கே? அவர்கள் உயிரோடு வீடு திரும்புவார்களா?’ என்று கேள்வி எழுப்பி, கடந்த வருட இறுதியில் 30.12.2016 வெள்ளிக்கிழமை அன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலும் சமநேரத்தில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை குறித்த அடையாள உணவு உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். போராட்டத்தின் முடிவில்,
‘எங்கள் பிள்ளைகளின் தியாகங்கள் மீது சவாரி செய்து, அரச பதவியும் பணமும் பெற்று, மயங்கி மதிகெட்டு, ஒற்றையாட்சியோடு பிளவுபடாத இலங்கையை உருவாக்கத்துடிக்கும் துட்டகைமுனுவின் பேரனுக்கு, எல்லாள மகாராசாக்களை ஈன்றெடுத்த ஈழத்து தாய்மார்களின் இறுதி அஞ்சலி’ என்று கூறி, இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனின் உருவப்படத்தை வவுனியாவில் தீயிட்டு கொழுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையினர், தமது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத்தெரிவில், கட்சியின் மாவட்டத்தலைவராக வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை தெரிவுசெய்ததோடு, ‘இரா.சம்பந்தனின் உருவப்படத்தை எரித்தவர்கள் விசமிகள்’ என்று கண்டனத்தீர்மானமும் நிறைவேற்றியிருந்தனர்.
‘தேர்தல் டிக்கட்டுக்காக சம்பந்தனின் மலம் தின்னும் பன்னிகள் இங்கு வாய் திறக்கக்கூடாது.’ என்று எச்சரித்து, கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினர், அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு எதிராக இன்று 11.01.2016 புதன் கிழமை கண்டன-எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில்,
சம்பந்தன் தீர்வுக் குழந்தையைப் பெற கஸ்டப்படுகின்றார். டாக்குத்தர் நீ போய் வைத்தியம் பார்,
தேர்தல் டிக்கட்டுக்காக சம்பந்தனின் மலம் தின்னும் பன்னிகள் இங்கு வாய் திறக்கக்கூடாது,
செத்த பிணங்கள் எங்களைப் பார்த்து விசமிகள் என்று கூறுவதா?,
சம்பந்தனுக்கு அடி கழுவி பிழைப்பு நடத்தும் நீ எங்களை விமர்சிப்பதா?,
சம்பந்தனுக்கு விசுவாசம் காட்டுவதற்காக சுத்தியலிங்கம் நீ எங்களை விமர்சிப்பதா?,
சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் போட முடியாத ஆண்மை கெட்ட வவுனியா தமிழரசுக்கட்சிக்காரரே மக்களிடம் வாய்ச்சொல் வீரர் நீங்களே,
உங்கள் சாக்கடை அரசியலால் இன்று நாங்கள் வீதியில் நிற்கிறோம்,
புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் சுத்திய அமைச்சரிடம் ஜாக்கிரதை,
வடக்கு மாகாணத்தின் ஊழல் பெருச்சாலி சுத்திய அமைச்சரே நீதி விசாரணைக்கு தயாரா?,
ஊழல் விசாரணை கமிட்டியில் ஆஜர் ஆகி முதலில் உன்னை யோக்கியன் என்று நிரூபி.
என்று கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி தமது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment