திருவெம்பாவையை முன்னிட்டுச் சைவமகாசபையினால் வருடாவருடம் நடாத்தப்படும் ஈழத்துச் சிதம்பரப் பாத யாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை(08) காலை-07 மணிக்குப் பிரசித்தி பெற்ற யாழ். சம்பில்துறை சம்புநாத ஈச்சர 21 அடி உயர சிவபெருமான் திருச் சொரூப முன்றலிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பாத யாத்திரையின் போது பல திருத்தலங்கள் தரிசிக்கப்படவுள்ளதுடன், இறுதியில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையவுள்ளது.
இந்தப் பாத யாத்திரையில் ஆசார சீலர்களாகப் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாத யாத்திரையின் போது பல திருத்தலங்கள் தரிசிக்கப்படவுள்ளதுடன், இறுதியில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையவுள்ளது.
இந்தப் பாத யாத்திரையில் ஆசார சீலர்களாகப் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment