கடந்த-1984 ஆம் ஆண்டு நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியானவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(10) இடம்பெற்றது.
முற்பகல்-10 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னாலுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக ஆரம்பமான வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
ஈகைச் சுடரேற்றி கொல்லப்பட்டவர்கள் நினைவாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரதான நினைவுத் தூபிக்கு வடமாகாணப் பதில் முதலமைச்சரும், வடமாகாண விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏனைய நினைவுத் தூபிகளுக்கு மலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றது.
சிவசேனை அமைப்பின் தலைவரும்,மூத்த ஊடகவியலாளருமான மறவன் புலவு க.சச்சிதானந்தன் எழுதிய 'தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்' நூலும் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment